2021 ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட். அதனால் அவருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும் கிடைத்திருந்தது. இந்நிலையில் அவரை சென்னை அணியின் கேப்டன் தோனியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
“நம் நாட்டுக்காக விளையாட ருதுராஜ் தயாராகிவிட்டார். நெருக்கடியான சூழலில் அவரது அபாரமான ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தியதே அதற்கு சான்று. அது பிளே-ஆஃப் போட்டிகளிலும் தொடர்ந்திருந்தது.
கிட்டத்தட்ட தோனியை போன்ற குணாதிசயத்தை கொண்டவர் அவர்.
மிகவும் அமைதியானவர். தனது இலக்கை அடைவதில் கவனமாக இருப்பார். அதற்காக கடுமையாக உழைக்க கூடியவர்” என ரெய்னா சொல்லி உள்ளார்.
மேலும் சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் தங்களது தொடக்க வீரர்கள் என தெரிவித்துள்ளார். இருவரும் 2021 சீசன் முழுவதும் அணிக்கு தேவைப்பட்ட நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர் என ருதுராஜ் மற்றும் டூ ப்ளசிஸை பாராட்டியுள்ளார் அவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்