Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கிருஷ்ணகிரி: உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்து மேலாளரைத் தாக்கிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து மேலாளரைத் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூளகிரியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட ஓசூரைச் சேர்ந்த நண்பர்கள் 4 பேர், அதற்கான பணத்தை செலுத்தாமல் செல்ல முயன்றுள்ளனர். இதுபற்றி கேட்ட உணவக மேலாளர் ஹரிஷை அவர்கள் தாக்கியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. கணினிகள், அலைபேசிகள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகின.

image

காயமுற்ற ஹரிஷ் அளித்த புகாரின்பேரில், தகராறில் ஈடுபட்ட நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்த சூளகிரி காவல் துறையினர், கணேஷ், அர்ஜுன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி: தேவர் குருபூஜை: போலீஸ் வாகனங்கள் மேலே ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள் - கைது செய்ய கோரிக்கை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்