Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

களைகட்டும் தீபாவளி விற்பனை: ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

தீபாவளியையொட்டி சென்னையில் முக்கிய வணிகப் பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ட்ரோன் கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
 
தியாகராயநகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என்பதால் அதனை தடுக்கும் பொருட்டு ட்ரோன் கேமரா உதவியுடன் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வானத்தில் வட்டமிட்டவாறு கண்காணிக்கும் ட்ரோன் கேமராக்கள், குற்றச்செயலில் ஈடுபடுவோரை காட்டிக்கொடுக்கும் என்பதால் காவல்துறையினருக்கு இது பெரிதும் கைகொடுப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் சாலையில் வாகனங்களை நிறுத்துவதும் சாலைகளில் கடைகள் அமைப்பதையும் தடுக்க முடிவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்