இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலி நீக்கப்படுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான், அது நடந்துவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக பேட்டிஅளித்த விராட் கோலி, உலகக் கோப்பை முடிந்தபின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்திய டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், தென் ஆப்பிரி்ககத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது, டெஸ்ட் அணிக்கு கோலியும், ஒருநாள் அணிக்கு ரோஹித்சர்மாவும் கேப்டனாக நியமித்த தேர்வுக்குழுவினர் அறிவித்தனர்.
0 கருத்துகள்