Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

போலீஸ் விசாரணையில் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மரணமா? – விசாரணைக்கு தினகரன் வலியுறுத்தல்

முதுகுளத்தூரில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இந்நிகழ்வில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் இதுகுறித்து டி.ஜி.பி. நேரடியாக தலையிட்டு, விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

இதனைப்படிக்க...பாதுகாப்பு படை தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொலை! நாகாலாந்தில் அதிர்ச்சி சம்பவம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்