Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இளைஞர் கொலை: காவல்துறை தேடுதல் வேட்டையில் 5 துப்பாக்கிகள் பறிமுதல்; 3 பேர் கைது

திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் 5 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ராக்கேஷ் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கவராயன்குளம், தவசிமடை, சாணார்பட்டி, நத்தம், வெள்ளோடு, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 ஏர்கன் உட்பட 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கரி மருந்து உள்ளிட்டைவையும் கைப்பற்றப்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்