Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'மீண்டும் செய்வார் என கணித்தே நகர்ந்து ஆடினேன்' - கடைசி சிக்ஸர்கள் குறித்து ராகுல் தெவாட்டியா

மும்பை: 'முதல் பந்தை கணித்தே கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முடிந்தது' என ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றிபெற உதவிய ராகுல் தெவாட்டியா தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 189 ரன்கள் குவித்தது. 190 என்ற இமாலய இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில்லின் 96 ரன்கள் உதவியுடன் வெற்றி இலக்கை வெகுவாக நெருங்கியது. எனினும், 19வது ஓவரில் அவர் அவுட் ஆக ஆட்டத்தில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்