மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலராகியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஜோர்டான் 3.5 ஓவர்கள் வீசி, 58 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் அவர் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் 25 ரன்கள் கொடுத்திருந்தார். அந்த ஒரு ஓவர் ஆட்டத்தின் முடிவையே மாற்றி அமைத்தது எனவும் சொல்லலாம்.
0 கருத்துகள்