Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | பினிஷர் தோனி... கடைசி பந்தில் சென்னைக்கு கிடைத்த வெற்றி

மும்பை: ஐபிஎல் 15வது சீஸனின் 33வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரின் முதல் பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கத்துக்கு மாறாக மும்பையின் பவுலிங் ஸ்பெல்லை தொடங்கிய டேனியல் சாம்ஸ் ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் ஆனார். மிட்சல் சான்ட்னர் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இரண்டு பவுண்டர்களை விளாசி சிறப்பான துவக்கம் கொடுத்தாலும், அதை நீடிக்கத் தவறினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் சாம்ஸ் பந்தில் அவுட் ஆக, அம்பதி ராயுடுவுடன் கூட்டணி அமைத்தார் ராபின் உத்தப்பா. இருவரும் சிறிதுநேரம் தாக்குப்பிடித்து ஆடினர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்