Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | மும்பையால் 'நிம்மதி'யடைந்த ஆர்சிபி - பிளே ஆப் சுற்றில் இருந்து டெல்லி கேபிட்டல்ஸ் அவுட்

நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. இன்று டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடின. மும்பை ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிய நிலையில் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது.

ஆனால், டெல்லியின் பிளே ஆப் கனவை முதல் சில நொடிகளில் இருந்தே மும்பை அணி கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்தது. 160 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஜோடியில் ரோஹித் சர்மா கைகொடுக்க தவறி 2 ரன்களில் முதல் விக்கெட்டாக நடையைக் கட்டினாலும், மற்றொரு ஓப்பனர் இஷான் கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்லோவாக ஆரம்பித்தாலும் ஒருகட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்திய அவர், 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்