மும்பை: ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷால் படேல் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேவேளையில் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.
ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷால் படேல் அணிக்கு திரும்பியுள்ளனர்.
0 கருத்துகள்