Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோலியை தூக்கிய அந்தவொரு தருணம் ரோகித் சர்மா நம்மில் ஒருவரானார்: நெட்டிசன்கள் கொண்டாட்டம்

சென்னை: நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இந்திய அணியின் வீரர் கோலியின் ஆட்டம் அமைந்தது. இந்திய அணி வெற்றி பெற்றதும் மைதானத்தில் குழுமியிருந்த 90,293 ரசிகர்களுக்கு முன்னர் கோலியை அலேக்காக தூக்கி கொண்டாடினார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா.

அந்தவொரு தருணம் போட்டியை நேரிலும், தொலைக்காட்சி மற்றும் செல்போன் வழியாகவும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்ட தருணமாக அமைந்தது. இந்த வெற்றி கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இதே சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா பெற்ற தோல்விக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. அதனை நெட்டிசன்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்