Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

T20 WC | இந்தியா Vs பாக். - சர்ச்சைக்குள்ளான நோ-பால் அறிவிப்பு

இந்திய அணி பேட்டிங்கின் போது 20-வது ஓவரின் 4-வது பந்தை கள நடுவர் நோ-பால் என அறிவித்ததால் அது சர்ச்சைக்குள்ளானது.

20-வது ஓவரை ஸ்பின் பவுலர் முகமது நவாஸ் வீசினார். இதில் 4-வது பந்தை ஃபுல் டாஸாக அவர் வீசியதால் அந்த பந்தை விராட் கோலி, சிக்ஸருக்கு விளாசினார். இடுப்புக்கு மேல் வீசப்பட்ட பந்து என்பதால் அதை நோ-பால் என கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் அதற்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் நோ-பால் அறிவிப்பு சரியானதே என்று நடுவர்கள் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்