Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சியை பாஜக ‘மைண்ட்செட்’ பிசிசிஐ தடுக்கிறது” - ரமிஸ் ராசா சரமாரி சாடல்

கராச்சி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது பாஜக செல்வாக்கு செலுத்துவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பிசிசிஐ முட்டுக்கட்டை போடுகிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும், வீரருமான ரமிஸ் ராசா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

லாகூரில் அரசுக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரமிஸ் ராசா இந்தக் குற்றச்சாட்டை எழுப்பினார். “இந்தியாவில் துரதிர்ஷ்டவசமாக என்ன நடக்கின்றது என்றால் அங்கு பாஜக மனநிலை நிலவி வருகிறது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. இதற்காகத்தான் நான் பிஜேஎல் அல்லது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் லீக் போன்றவை தேவை என்கிறேன். இதன் மூலம்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு தேவையான நிதி ஆதாரங்கள் கிடைக்கும். நமக்குத் தேவையான நிதியை நாமே திரட்டிக் கொள்ள முடியும். இதனால் பிசிசிஐ நிதி ஆதிக்கம் செலுத்தும் ஐசிசி-யின் மீதான ஒரு சார்பில் இருந்து நாம் விடுபட முடியும். இப்போதைய அவசியத் தேவை இதுதான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்