Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“நான் அவர்களைப் புறக்கணிக்கிறேன்”- 379 ரன்கள் விளாசிய பிரிதிவி ஷா | இனியாவது அழைக்குமா அணி?

குவாஹாத்தியில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை பி-பிரிவு போட்டியில் அசாம் அணிக்கு எதிராக மும்பை 687 ரன்களை 138 ஓவர்களில் குவித்து டிக்ளேர் செய்த ஆட்டத்தின் நாயகன், பிரிதிவி ஷா. இவர் 383 பந்துகளில் 49 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 379 ரன்களை விளாசினார். 21 ரன்கள் எடுத்திருந்தால் லாராவின் சாதனையை சமன் செய்திருப்பார். ஆனால், அதற்குள் எல்.பி.டபிள்யூ ஆகிவிட்டார். டெஸ்ட் அழைப்பிற்காக காத்திருக்கும் மற்றொரு வீரரும் முன்னாள் கேப்டனுமான ரஹானே 191 ரன்கள் விளாசினார்.

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் 2-வது பெரிய தனிப்பட்ட ஸ்கோரை அடித்து சாதனை புரிந்துள்ளார் பிரிதிவி ஷா. ரஞ்சி டிராபியில் 350 ரன்களைத் தாண்டிய 9-வது வீரராகத் திகழ்கிறார் பிரிதிவி ஷா.


கருத்துரையிடுக

0 கருத்துகள்