Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மணிகா பாத்ராவின் பிஎஸ்பிபி அணியை வீழ்த்திய தமிழ்நாடு

ஜம்மு: நடப்பு தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் மணிகா பாத்ரா இடம்பெற்று விளையாடி வரும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் போர்டு (PSPB) அணியை வீழ்த்தியுள்ளது தமிழ்நாடு அணி. 3-1 என்ற கணக்கில் அரையிறுதியில் இந்த வெற்றியை தமிழ்நாடு பெற்றுள்ளது.

யாஷினி மற்றும் கவுஷிகா என இருவரும் மணிகா பாத்ராவை வீழ்த்தியது தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடி அசத்தி இருந்தார் கவுஷிகா. அது மணிகா பாத்ராவுக்கு பின்னடைவாக அமைந்தது. 11-8, 9-11, 11-8, 7-11, 11-5 என கவுஷிகா வெற்றி பெற்றார். யாஷினி, ரீத் ரிஷ்யாவை வீழ்த்தினார். அதன் மூலம் தமிழ்நாடு 2-0 என முன்னிலை பெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்