சென்னை: "என்னை அதிகமாக ஒட வைக்காதீர்கள் என்று அணியினரிடம் கூறிவிட்டேன். என் பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
0 கருத்துகள்