Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சிஎஸ்கே தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி டெல்லி அணிக்கு எதிராக அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்காமல் 17 புள்ளிகளுடன் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்து விடும்.

பிளே ஆஃப் சுற்றின் இரு ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. இந்நிலையில் இந்த இரு ஆட்டங்களுக்கும் கவுன்ட்டர் டிக்கெட் விற்பனை கிடையாது என்றும் அனைத்து டிக்கெட்களின் விற்பனை இணையதளம் வழியாகவே நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக டிக்கெட் கவுன்ட்டர்களில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்