Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலகக் கோப்பை நினைவுகள் | 1979-ல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த மேற்கு இந்தியத் தீவுகள்

முதல் உலகக் கோப்பையின் வெற்றியை தொடர்ந்து 1979-ம் ஆண்டு 2-வது உலகக் கோப்பை தொடரையும் இங்கிலாந்திலேயே நடத்தியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணியே கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்த கணிப்பை அவர்கள், பொய்க்க செய்யவில்லை. கிளைவ் லாயிட் தலைமையில் சாம்பியன் பட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி தக்க வைத்துக்கொண்டது.

இந்த சாதனையை 28 வருடங்களுக்குப் பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக இரு முறை கோப்பையை வென்று முறியடித்தது. எதிர்த்து நின்ற அனைத்து அணிகளையும் மிரளச் செய்ததுடன், எந்த அணியாலும் சமாளிக்க முடியாத அளவுக்கு ஆக்ரோஷமாக செயல்பட்டு மீண்டும் ஒரு முறை கிரிக்கெட் உலகை அதிர வைத்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்