Header Ads Widget

Breaking News

    Loading......

கிராமப்புற விளையாட்டு வீரர்கள் சாதனை படைக்க கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர்

சென்னை: கிராமப்புற விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பதற்கு கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார்.

6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு, முதல் 3 இடங்களை பிடித்த மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியாணா மாநிலங்களுக்கு கோப்பைகளை வழங்கினர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்