Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பார்முக்கு திரும்புவாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்? - குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இன்று மோதல்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் விளையாடி உள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்த அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் பார்மின்றி தவித்து வருகிறார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி இரட்டை சதங்கள் விளாசிய நிலையில் ஐபிஎல் தொடரை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். 4 ஆட்டங்களில் கூட்டாக அவர், 39 ரன்களே சேர்த்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்