Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரிஸ்க் எடுத்தேன்: மனம் திறக்கும் விராட் கோலி

தரம்சாலா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு 7 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசினார். ரஜத் பட்டிதார் 46, கேமரூன் கிரீன் 46 ரன்கள் சேர்த்தனர்.

242 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியானது 17 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தற்போதைக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வானார். அவர், நடப்பு சீசனில் 70.44 சராசரி மற்றும் 153.5 ஸ்டிரைக் ரேட்டுடன் 643 ரன்களை வேட்டையாடி உள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் விராட் கோலி கூறியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்