கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடியாக விளையாடியது. எய்டன் மார்க்ரம் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசிய நிலையில் ஹர்ஷித் ராணா பந்தில் போல்டானார். முதல் விக்கெட்டுக்கு எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் ஜோடி 10.4 ஓவர்களில் 99 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷுடன் இணைந்து வாணவேடிக்கை நிகழ்த்தினார். 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது 7-வது அரை சதத்தை விளாசினார் மிட்செல் மார்ஷ். நடப்பு சீசனில் இது அவரது 4-வது அரைசதமாக அமைந்தது. தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி வீசிய 14-வது ஓவரில் மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன் ஆகியோர் தலா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர்.
0 கருத்துகள்