துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 11 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை செய்கிறது.
துபாயில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெறுகின்ற அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது. இந்நிலையில், இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது.
0 கருத்துகள்