Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஞாயிறன்றும் ரூ.2,000 நிதிக்கான டோக்கன்: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக வழங்கப்படவிருக்கும் 2 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் ஞாயிற்றுக்கிழமையும் விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நிவாரணமாக அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை 2 ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் நியாயவிலைக் கடை ஊழியர்கள் டோக்கன் விநியோகம் செய்வார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

முதல் தவணை விநியோகம் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்