Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் ஒரே நாளில் 3.66 லட்சம் பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரேநாளில் 3,66,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் 4.01 லட்சம், நேற்று 4.03 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.66 லட்சமாக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 2,22,96,414லிருந்த கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,26,62,575ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 3,754 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 2,42,362லிருந்து 2,46,116ஆக உயர்ந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்