இந்தியாவில் ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 3.57 லட்சம், நேற்று 3.82 லட்சமாக இருந்த பாதிப்பு தற்போது 4.12 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,06,65,148 லிருந்து 2,10,77,410 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,980 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,26,188 லிருந்து 2,30,168ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,69,51,731 லிருந்து 1,72,80,844 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 3,29,113 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 82.03%, உயிரிழப்பு விகிதம் 1.09% என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,66,398ஆக உயர்ந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்