Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இறுதிப் போட்டியில் கோப்பையைப் பகிர்ந்தளிப்பதா?- புதிய முறையைக் கடைப்பிடியுங்கள்: ஐசிசிக்கு கவாஸ்கர் வலியுறுத்தல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் வெற்றியாளரை அறிவிப்பதில் புதிய முறையைப் புகுத்துவது குறித்து ஐசிசி சிந்திக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்