Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக் நினைவலைகள் - 5: ஒரே ஒருவர் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி!

1908 லண்டன் ஒலிம்பிக்கில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. அப்போதெல்லாம் ஓட்டப் பந்தயப் போட்டிகள் மைதானத்தைச் சுற்றி வரும்படி அமைக்கப்படவில்லை. நேராக ஓடி இலக்கை அடைய வேண்டும். அப்படித்தான் தடகளம் 400 மீட்டர் ஓட்டப் பந்தய இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி நடக்கும்போது இங்கிலாந்து வீரர் வெய்ண்டம் ஹால்ஸ்வெலேவை, அமெரிக்க வீரர் ஜான் கார்பெண்டர் முந்தவிடாமல் தள்ளிவிட்டார்.

இதனால் இப்போட்டி சர்ச்சையானது. 'அமெரிக்காவில் தடகளப் போட்டிகளில் விளையாடும்போது, இப்படி நடந்துகொள்வது வழக்கம்தான். அமெரிக்க தடகள விதிப்படி தள்ளிவிட்டது தவறில்லை' என்று கார்பெண்டரும் அவருக்கு ஆதரவாக அமெரிக்கர்களும் வாதம் செய்தனர். ஆனால், 'இங்கிலாந்து தடகள விதிப்படி முந்தவிடாமல் செய்யும் செயல்கள் தவறு' என்று இங்கிலாந்து வீரர் ஹால்ஸ்வெலேவும் அவருக்கு ஆதரவாக இங்கிலாந்து நாட்டினரும் மல்லுக்கட்டினர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்