இந்தோனேஷியாவில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
இந்தோனேஷியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்திருப்பதால் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தநிலையில் ஜாவாவில் உள்ள சர்ஜிடோ மருத்துவமனையில் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கெனவே தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் இருந்ததாகவும், ஆனால் நோயாளிகள் வருகை அதிகரித்ததால் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. எனினும் தற்போது தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்