ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் எனும் என்னுடைய கனவு நனவாகியுள்ளது, இந்த வெற்றியை என் தேசத்துக்கு அர்ப்பணிக்கிறேன் என்று பளுதூக்குதலில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீாரங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
0 கருத்துகள்