தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பள்ளிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் 438 பள்ளிகள் 55 கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மாணவ மாணவிகள் மற்றம் ஆசிரியர்கள் பள்ளிக்கு உள்ளே வருவதற்கு முன்பு சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சோதனையில் காய்ச்சல் அறிகுறியுடன் இருந்த தஞ்சை அரசுக் கல்லூரி மாணவி ஒருவருக்கும், திருப்பனந்தாள் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கும் அதேபோல கண்ணந்தங்குடி, பேராவூரணி பள்ளி மாணவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த மாணவ மாணவிகள் படித்த வகுப்பறையில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்