இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்தே விலகியுள்ளார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ராகேந்திர ரகு வீசிய பந்தை பிடிக்க முயன்றபோது கையில் காயம் ஏற்பட்டது, அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்படிப்பும் திடீரென வந்துள்ளதால், அவருக்கு ஓய்வு தேவை என்பதால் நீக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்