திராவிட இயக்க வரலாற்றில் சேலத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்திற்கு வருகைபுரிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சேலத்தில் விரைவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ''திராவிட இயக்க வரலாற்றில் சேலத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.
நீதிகட்சி திராவிடர்கழகமாக பெயர் மாற்றம் பெற்றது சேலம் மாநகரத்தில் தான். 1949-50 ஆண்டுகளில் சேலம் கோட்டையில் உள்ள அபிப் தெருவில் தான் கருணாநிதி வாழ்ந்தார். அப்படிப்பார்த்தால் நான் எனது சொந்த வீட்டுக்குத்தான் வந்திருக்கிறேன். நான் முதலமைச்சராக இருக்கும்போது வீரபாண்டியார் இல்லையே என்ற வருத்தம் தான் எனக்குள் நீடிக்கிறது'' என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்