Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பதக்கத்தால் போரை நிறுத்திவிட முடியாது - பட்டம் வென்றும் மகிழ்ச்சியை கொண்டாடாத உக்ரைன் மகளிர் அணியினர்

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி தனது கடைசி சுற்றில் 3-1 என்ற கணக்கில் போலந்தை வீழ்த்தியிருந்தது. தொடர்ச்சியாக 9 வெற்றி, ஒரு டிராவை கண்டு அபார பார்மில் இருந்த போலந்தின் கியோல்பாசா ஒலிவியாவை, உக்ரைனின் உஷெனினா அனா எளிதாக சாய்த்தார். இந்த ஆட்டம் முடிவடைந்ததும் உஷெனினா அனா, அமைதியாக நடந்து வந்து தன் சக தோழியான நடாலியா புக்ஸாவின் தோள்களை தட்டிக்கொடுத்தார்.

உக்ரைன் வீராங்கனைகளிடம் சாம்பியன் பட்டம் வென்றுவிட்டோம் என்பதற்கான ஆரவாரமோ, மகிழ்ச்சிக்கான பாய்ச்சலோ இல்லை. மாறாக கண்ணீரும், அரவணைப்புகளும் மட்டுமே இருந்தன. காரணம்அவர்களது நாடு மீது ரஷ்யா தொடுத்துள்ள போர். லட்சக்கணக்கானோர் ரஷ்யப் படையெடுப்பை எதிர்கொண்டு, உயிருக்குத் தப்பியோடி, உணவு மற்றும்தங்குமிடத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது செஸ் ஒலிம்பியாட்டில் வென்றுள்ள மகத்தான வெற்றியை முழுமையாக, மனதார மகிழ்ந்து உக்ரைன் வீராங்கனைகளால் கொண்டாட முடியவில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்