Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செஸ் ஒலிம்பியாட் | இந்திய அணிகளுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் வெற்றி பெற்ற இந்திய பி, இந்திய ஏ (மகளிர்) அணிகளுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய பி அணியும், மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியும் வெண்கலப் பதக்கங்களை வென்றன. அந்த அணி வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள். பதக்கம் வென்ற குகேஷ், நிஹல் சரீன், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோருக்கும் வாழ்த்துகள். இவர்கள் சிறப்பாக செயல்பட்டதோடு, உறுதியான திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்