Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023 | ''என் ஆட்டம் எனக்குத் தெரியும்'' - ஆட்ட நாயகன் விருதுக்குப்பின் சூர்யகுமார் யாதவ் பேட்டி

மும்பை: தனது ஆட்டம் குறித்து தனக்குத் தெரியும் என்று ஆட்ட நாயகன் விருதுக்குப்பின் பேட்டி அளித்த சூர்யகுமார் தெரிவித்தார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 54-வது லீக் போட்டியில் பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ். அவரது அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவர்களில் 200 ரன்கள் என்ற இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு மும்பை முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார் சூர்யகுமார் யாதவ். மற்றொரு பேட்ஸ்மேனான நேஹல் வதேரா 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர் தெரிவித்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்