ஜேஸன் பெஹரன்டார்ஃப், லங்கி இங்கிடி இருவருமே அடுத்த போட்டியிலும் விளையாடமாட்டார்கள். ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் அணியிலிருந்து விலகியது, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.
சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அணியில் முதல்தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் என்றாலே லுங்கி இங்கிடி, ஹேசல்வுட் இருவரும்தான் என்ற நிலையில் அதில் ஹேசல்வுட் இல்லாதது பெரும் குறையானது. ஆனால், அவருக்கு பதிலாக ஆஸி. வீரர் ஜேஸன் பெஹரன்டார்ஃப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 கருத்துகள்