Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

துருக்கியில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் தகுதிச்சுற்றுக்கு தமிழகத்தின் மனோகரன் தேர்வு: பணம் இல்லாததால் போட்டியில் கலந்துகொள்வதில் சிக்கல் https://ift.tt/32bHr2i

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (31). பார்வைக்குறைபாடுள்ள மனோகரன், ஜூடோ விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்குத் தேர்வாகி உள்ளார். ஆனால், போதிய பணம் இல்லாததால் தகுதிச்சுற்றில் அவர் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.

பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்று வரும் மே 23-ம் தேதி, துருக்கி நாட்டில் உள்ள அந்தல்யா நகரில் நடைபெற உள்ளது. இந்தச் தகுதிச்சுற்றில் கலந்துகொள்ள பயணச்செலவு உட்பட விளையாட்டு அமைப்புக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். வறுமையான குடும்பப் பின்புலத்தைக் கொண்டவரான மனோகரன், இந்தத் தொகையை கட்ட முடியாமல் திணறி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்