இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைக் காண்பதற்கு ரசிகர்களுக்கு விதிக்கப்பட்ட தடை முற்றிலும் நீக்கப்பட்டது. இதனால் அரங்கு முழுவதும் தடையின்றி ரசிகர்கள் போட்டியைக் கண்டுகளிக்கலாம்.
இதற்கான அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் நேற்று வெளியிட்டார். இதையடுத்து, ஆகஸ்ட் 4-ம் தேதி டிரன்ட்பிரிட்ஜில் நடக்கும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அரங்கு நிறைய ரசிகர்கள் குவிந்திருப்பதைக் காண முடியும்.
0 கருத்துகள்