கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் மற்ற நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என மத்திய சுகாதார இணையமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதார இணையமைச்சர் பிரவீன் பாரதி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். மேலும், “நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 12-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது பற்றி மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கேள்விக்கு, நீட் ரத்து செய்யப்படாது என அமைச்சர் பிரவீன் பாரதி பதிலளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்